உன்னுடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துப் பார்-ஓஷோ!

உன்னுடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துப் பார்-ஓஷோ!

Share it if you like it

உன்னுடைய மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி!

நடக்கும் போதும்.

பேசும் போதும்.

குளிக்கும் போதும்.

சாப்பிடும் போதும்.

உன்னுடைய ஒவ்வொரு
அசைவையும் கவனி!

ஒவ்வொன்றும் கவனிப்பதற்கான ஒரு
சந்தர்ப்பமாக இருக்கட்டும்.

கடந்து போனதை
மறந்து விடு.

கவனித்திருக்கும் போது தெளிவு பிறக்கிறது

கவனிக்கும் போது உன்னுடைய அவசர கதி
நிதானமாகிறது.

எண்ணங்கள் மெலிந்து போய் வலுவிழந்து
விடுகின்றன.

உன் மனம் கண்ணாடி போல் பிரதி பலிக்கிறது

தெளிவு உதிக்கும் போது
ஆனந்தம் மலர்கிறது.

விழித்திருப்பதே வாழ்வு என்று தெரிந்து விடுகிறது.

விழிப்பை அழித்து விட முடியாது என்பதால்
இனி இறப்பில்லை என்பது தெரிந்து விடுகிறது

இறப்பை நீ அணுகும்போது
அதையும் உன்னால் கவனிக்க முடியும்

இறப்பை கவனித்துக் கொண்டே இறப்பாய்

ஆனால் கவனிப்பது
இறப்பதில்லை

விழிப்படைந்த மனது உள் நோக்கி நகருகிறது
விழிப்படையாத மனது வெளியே இருப்பதை
நோக்கிப் பாய்கிறது.

Share it if you like it