உபி முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் !

உபி முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் !

Share it if you like it

  • உத்தரபிரதேச போலீசாருக்கு நேற்று மதியம் 12 மணியளவில் அலைபேசியின் வாட்சாப் நம்பருக்கு ஒரு செய்தி வந்தது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எதிரி என்றும் அவரை விரைவில் வெடிகுண்டு மூலம் அகற்றுவோம் என்றும் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல் துறையினர்.
  • லக்னோவின் கோமதி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தீரஜ் குமார், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 505 (1) (ஆ) கீழ் அடையாளம் தெரியாத வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். பொது அமைதிக்கு எதிராக, மரணத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கான பிரிவு 506 மற்றும் அச்சுறுத்தலை வெளியிடுவதற்கு தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவதற்கான பிரிவு 507 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share it if you like it