உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய சட்டம்..!

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய சட்டம்..!

Share it if you like it

இந்தியாவிலேயே அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் யோகி ஆதித்யநாத். சமூக விரோத சக்திகளுக்கும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க, முயற்சிக்கும் நபர்களுக்கும். இவர் கொடுக்கும் கஷாயம் உலகில் எந்த ஒரு மருத்துவ குறிப்பிலும் பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே..!

லவ் ஜிஹாத் சம்பவங்களைத் தடுக்க. புதிய சட்டம் தேவையா என்பதை குறித்து. ஒரு திட்டத்தை தயாரித்து உடனே அறிக்கை அளிக்குமாறு. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக. முதல்வரின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் தெரிவித்தார்.

குமார் மேலும் கூறுகையில், “மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லவ் ஜிஹாத் குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன.”

உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி, கான்பூர், மீரட், மற்றும் சமீபத்தில் லக்கிம்பூர் கெரி ஆகிய இடங்களில் இருந்து பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு பல பெண்கள் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“இது ஒரு சமூகப் பிரச்சினை. அதனை தடுக்க, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் பெறுவதை கடுமையாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பண உதவி வழங்கப்பட வேண்டும்.”

லவ் ஜிஹாத் என்பது ஒரு சதி வேலை., முஸ்லிம் ஆண்கள் முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதை இலக்காகக் கொண்டு இவர்கள் செயல்படுவதாக மற்றொரு அதிகாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it