நாட்டின் மிகப்பெரிய மாநிலமும், அதிகளவில் சட்டசபை மற்றம் மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 263 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், 41.8 சதவீத வாக்குகளை பெறும் என்று அக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ; ABP நாடு