கடமை தவறாத பெண் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு குவியும் பாராட்டுக்கள்…!

கடமை தவறாத பெண் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு குவியும் பாராட்டுக்கள்…!

Share it if you like it

நாடு முழுவதும் இன்று 74 சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது.  பாரத பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி தேசத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

நெல்லையில் தந்தையின் உயிரிழப்புக்கு கூட உடனடியாக செல்லாமல் சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பை பெண் ஆய்வாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தியுள்ளார்.

நேற்று இரவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு தந்தை இறந்து விட்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு உடனே செல்லாமல்,  வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி இருக்கும் ஆயுதபடை பெண் ஆய்வாளரின் கடமை உணர்ச்சியை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it