கணவரை இழந்த நிலையில் நாட்டை காக்க புறப்பட்ட வீரமங்கை !

கணவரை இழந்த நிலையில் நாட்டை காக்க புறப்பட்ட வீரமங்கை !

Share it if you like it

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த,மேஜர் விபூதி டவுண்டியால்,ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலில் அவர் உயிரிழந்தார். திருமணமான ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்த போதும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி கணவரின் காதருகே சென்று ஐ லவ் யூ என அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது அனைவரின் இதயமும் கசிந்தது. இந்நிகழ்வு நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில் சேருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில் வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. பின் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமியில் ஓராண்டு பயிற்சியில் சேர உள்ளார் நிகிதா. “என் கணவர் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.அதுதான் எனக்கு தைரியமும்,உத்வேகத்தையும் தருகிறது” என்று நிகிதா கூறியுள்ளார்.


Share it if you like it