கதாபாத்திரத்திற்காக 48 நாட்கள் விரதமா ! – மெய்சிலிர்க்கும் திரை வட்டாரங்கள் !

கதாபாத்திரத்திற்காக 48 நாட்கள் விரதமா ! – மெய்சிலிர்க்கும் திரை வட்டாரங்கள் !

Share it if you like it

திரை உலகின் நடிகைகளில் சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வலம் வந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் நடிகை நயன்தாரா முதன்முறையாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்துள்ளார். இதில் விஷேசம் என்னவென்றால் அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் பக்தியுடன் அம்மனை வணங்கி, கடந்த 48 நாட்களாக விரதம் இருந்திருக்கிறார் என்பதுதான் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் அவர் ஒரு கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர். அவருடைய உண்மையான பெயர் டயானா மரியம் குரியன்.

மூக்குத்தி அம்மன் என்ற கதாபாத்திரத்திற்காக இந்த அளவு சிரத்தையோடு அவர் செய்திருப்பது தொழிலில் மீது அவர் கொண்டுள்ள காதலையும், ஹிந்து மதத்தின் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் காட்டுகிறது என்று திரை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it