கன்னியாகுமரியில் தொடரும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அட்டுழியம்!

கன்னியாகுமரியில் தொடரும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அட்டுழியம்!

Share it if you like it

இந்தியாவில் கேரளாவை அடுத்து, தமிழகத்தில் தான் மதமாற்றம் செய்யும், நபர்களின் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. சேவை என்னும் நோக்கில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் குறிப்பாக ஹிந்துக்கள், எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம், இவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள், என்பதை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் காண முடிகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் மிகவும் பிரபலமான பள்ளியாக மகரிஷி வித்யா மந்திர் செயல்படுகிறது. நீண்ட காலமாக அப்பள்ளியில், ஹிந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். மதமாற்றும் கும்பல் தனது, கவனத்தை இங்கு செலுத்தியதன் விளைவாக. இப்பள்ளியின் நிர்வாகியாக ஹிந்து பெயரில் உள்ள அகஸ்தியன் என்னும், கிறிஸ்துவர் தனது நோக்கத்தை செயல்படுத்த, ஆரம்பித்து விட்டார்.

இந்து அறநிலையத்துறை இடத்தில் கிறிஸ்தவருக்கு, பள்ளி நடத்த அனுமதி வழங்கியது மட்டுமில்லாமல், அப்பள்ளி விழாவினை கன்னியாஸ்திரிகளை வைத்து நடத்தி முடித்துள்ளார். இதே சம்பவம் தொடருமானால், கிறிஸ்துவ மிஷனரிகளின் அட்டுழியம் அதிகரிக்கும், என்பது மட்டுமில்லாமல் ஹிந்து மாணவர்களின் எதிர்காலம், என்னவாகும் என்று பெற்றோர்கள் தங்கள், கவலையை தெரிவித்துள்ளனர்.  அண்மையில் நடைப்பெற்ற இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் செயல்படும், ஹிந்து சேவா சங்கம் தனது கண்டனத்தையும், புகாரையும் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் நாளுக்கு நாள் கிறிஸ்துவர்களின் அட்டுழியம் அதிகரித்து வருவதற்கு மேலும் ஒரு சாட்சியாக 70 ஆண்டுகள் பழமையான கோவிலை அபகரித்து அதன் பாதியில் சர்ச்சை பெரிதாக கட்டி இந்து மக்களை அச்சுறுத்தி அடித்து மிரட்டி வருகிறார்கள்.

மத பிரச்சாரம் செய்த ஐ.ஏ.எஸ் – கஞ்சி காய்ச்சி அனுப்பிய காவல் துறை!


Share it if you like it