திமுகவினர்  மது போதையில் சிசிடிவியிடம் கலாட்டா!

திமுகவினர் மது போதையில் சிசிடிவியிடம் கலாட்டா!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் என்று பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நெட்டிசன்கள் திமுகவையும், அக்கட்சி நிர்வாகிகளையும் கிண்டல் செய்து வருகின்றனர். தினம் ஒரு குறள் என்பது போல் தினம் ஒரு மீம்ஸாகவும், சமூக ஊடகங்களில் உலா வருவது அனைவரும் அறிந்ததே!

மீண்டும் ஒரு சம்பவமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தின் திமுக கிளைச் செயலாளரும், மேலக்கால் ஊராட்சியின் துணைத் தலைவருமான சித்தாண்டி, பல சில்லறை வேலை செய்து இப்பதவிக்கு வந்ததாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில். அப்பகுதியின் பள்ளி அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு பலரும் அஞ்சும் வகையில் கலாட்டாவில் ஈடுப்படுவது வாடிக்கையான ஒன்று.

இவரின் அட்டுழியங்களை தாங்க முடியாமல், ஒரு தனியார் அமைப்பு அப்பள்ளிக்கு சிசிடிவி கேமராவை அமைத்து கொடுத்திருந்தனர். மறுபடியும் மது அருந்தி விட்டு  பிச்சாண்டி சிசிடிவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மீண்டும் கேமராவா? என்று போதை தலைக்கேறி, அதனை தும்ஷம் செய்தார். இம்முறை ஆதாரத்துடன் காவல்துறையிடம், புகார் தெரிவித்தது அந்த தனியார் அமைப்பு. ஏற்கனவே இரண்டு முறை எஸ்கேப், ஆன சித்தாண்டி இம்முறை வசமாக, மாட்டி கொண்டு இருப்பது அப்பகுதியில் கடும் சிரிப்பலையையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை அடுத்து அவரிடம் காவல்துறை தீவிர விசாரனண செய்து வருகிறது.


Share it if you like it