காங்கிரஸின் மூத்த தலைவர் விலகியதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை!

காங்கிரஸின் மூத்த தலைவர் விலகியதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜோதிராதித்ய சிந்தியா. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. தனக்கு முதல்வர் பதவி வழங்காமல் மற்றொரு தலைவரான கமல்நாத்திற்கு அப்பதவியை காங்கிரஸ் வழங்கியது. இதனால் கடந்த ஒரு வருடமாக கட்சி  தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகிய பின், பத்திரிக்கையாளரை சந்தித்த அவர் பதினெட்டு ஆண்டுகளாக, கடுமையாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். ஆனால் எனக்கு உரிய மரியாதை வழங்காததால் இனியும் காங்கிரஸ் கட்சியில் இருப்பது சரி அல்ல என்பதால் இம்முடிவை எடுத்தேன் என்று  கூறியுள்ளார்.


Share it if you like it