பெருமாளை வணங்கும் இஸ்லாமியர்கள். இப்படியும் சிலர் அருமை!

பெருமாளை வணங்கும் இஸ்லாமியர்கள். இப்படியும் சிலர் அருமை!

Share it if you like it

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத்துறையில், மாசிமகம் திருவிழா அவ்வூர் மக்களால் மிகவும் சிறப்பாக நடைப்பெறும் நிகழ்ச்சியாகும். ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் தர்கா வழியாக, தீர்த்தவாரிக்காக, முழுக்குத்துறை கடற்கரைக்கு செல்வது வழக்கம்.

தைக்கால் தர்கா டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில் இஸ்லாமியர்கள் தங்கள் முன்னோர்கள் வழி வழியாக பின்பற்றி வந்த முறையில் சிறப்பாக வரவேற்பளித்தனர். அதனை அடுத்து ஸ்ரீ முஷ்ணம் ஆச்சாரியார்கள் தர்காவிற்கு சென்று, மாலை, நாட்டு சர்க்கரை,  பழங்கள், முதலிய பொருட்களை வழங்கி இரு சமூக மக்களும் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதனை அடுத்து பேசிய சையத் சக்காப் ஆறு தலைமுறையாக ஸ்ரீ முஷ்ணம் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Share it if you like it