கிறிஸ்துவ மிஷனரிகள் கொரோனாவையே மதமாற்றம் செய்வார்கள் நெட்டிசன்கள்-கலாய்!

கிறிஸ்துவ மிஷனரிகள் கொரோனாவையே மதமாற்றம் செய்வார்கள் நெட்டிசன்கள்-கலாய்!

Share it if you like it

கொரோனா வைரஸ் தொற்றின் கோர, தாண்டவம் உலகம் முழுவதும், பரவுவதை தடுக்க பல ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், என பலர் பணத்தை வாரி, இறைத்து ஆய்வில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இக்கொடிய நோயினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மக்களின் குடும்பத்தை சோக, கடலில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ் கிருமி.

சூழ்நிலை இவ்வாறு இருக்க, வாய்ப்பு அமையும் இடங்களில் எல்லாம், கிறிஸ்துவ மிஷனரிகள் தங்களின், மதமாற்றும் வேலையை செய்ய, தொடங்கி விடுகின்றனர். அண்மையில் கிறிஸ்துவ மிஷனரிகள்,  துண்டு பிரசுரம் ஒன்றினை, மக்களிடம் வழங்கி வருகின்றனர் அதில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கொரோனா வைரஸ் கிருமிடம், இருந்து தப்பித்துக்கொள்ள ஒரே, வழி தான் உள்ளது. அது ஏசு கிறிஸ்துவின் வழி, கொரோனா வைரஸ் கிருமியை, அழிக்க ஏசுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. வானத்திலும், பூமியிலும் சகலத்தையும், செய்ய ஏசுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. முழு உலகத்தை விட்டே, துரத்துவோம் வாருங்கள் ஏசுவிடம் மரண பயத்தில் இருந்து, விடுதலையாக்க ஏசு உங்களை அன்புடன் அழைக்கிறார் வாருங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரம்

கொரோனா வைரஸால் உலகமே, கவலையில் இருக்கும் பொழுது, இவர்கள் ஏன்? தங்களால் முடிந்த உதவிகளை செய்ய கூடாது. ஏன்? மதமாற்றம் செய்ய வேண்டும். துயரமான நேரத்தில் ஏசுவை ஏன்? மக்கள் மீது திணிக்க வேண்டும். இவர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிஷனரிகள் கொரோனாவையே மதமாற்றம் செய்தாலும், செய்வார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

மத பிரச்சாரம் செய்த ஐ.ஏ.எஸ் – கஞ்சி காய்ச்சி அனுப்பிய காவல் துறை!


Share it if you like it