குடி கெடுக்கும் மதுக்கடைக்கு அனுமதித்த தமிழக அரசே மனம் திருத்தும் ஆலயங்களை திறக்க மறுப்பது ஏன்? காடேஷ்ரா சுப்பிரமணியன் கேள்வி!

குடி கெடுக்கும் மதுக்கடைக்கு அனுமதித்த தமிழக அரசே மனம் திருத்தும் ஆலயங்களை திறக்க மறுப்பது ஏன்? காடேஷ்ரா சுப்பிரமணியன் கேள்வி!

Share it if you like it

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் அண்மையில் தமிழக முதல்வருக்கு தகுந்த பாதுகாப்போடு அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இதற்கு முதல்வரிடம் இருந்து சரியான பதில் கிடைக்காத காரணத்தால்.

இன்று இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்கள் முன் சமூக இடைவெளியை கடைபிடித்து தமிழக கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி தொண்டர்கள் கோவில் வாசலில் நின்று தோப்புகரணம் போடுவது, தீபம் ஏற்றுவது, கற்பூரம் ஆரத்தி காட்டுவது, என்று சாத்வீகமான முறையில் தங்கள் கோரிக்கை அரசிற்கு முன்வைத்தனர்.

மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்த அரசே ஆலயங்களை திறக்க முடியாத என்கின்ற வாசகங்கள், முதல்வருக்கு நல்ல புத்தி கொடு இறைவா என்கின்ற கோஷத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்துக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it