குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் கமல்நாத்தை, மூக்குடைத்த தற்போதையை முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் !

குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் கமல்நாத்தை, மூக்குடைத்த தற்போதையை முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் !

Share it if you like it

  • கொரோனா பாதிப்பில் மத்திய பிரதேச மாநிலம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா நோயால் மத்திய பிரதேச மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தி அவர்கள் பிப்ரவரி 12 ஆம் தேதியே எச்சரித்ததாக, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த கமல்நாத் கூறினார்.
  • இதற்கு பதிலடி தரும் விதமாக தற்போதைய பிஜேபியை சேர்ந்த முதல்வராக உள்ள சிவ்ராஜ் சிங் சௌஹான் ராகுல்காந்தி எச்சரித்த பொழுது அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசும் , முதல்வராக இருந்த கமல்நாத் அவர்களும்தான். அப்பொழுது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள். அவர் இனி முதல்வராக இருக்க மாட்டார் என்பதால் மக்களை நெருக்கடி நிலையிலிருந்து காப்பாற்ற தவறி சுயநலமாக இருந்துள்ளார். மேலும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது பிப்ரவரி மாதம் இறுதியில் தான். இருந்தாலும் பிஜேபி அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் அரசியல் செய்யாதீர்கள் என்று சிவ்ராஜ் சிங் சௌஹான், காங்கிரசை சேர்ந்த கமல்நாத் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share it if you like it