கொரோனா அச்சம் காரணமாக  திரையரங்கு, சுற்றுலா, வழிபாட்டுதலம் மார்ச் 31 வரை மூட -கேரள அரசு முடிவு!

கொரோனா அச்சம் காரணமாக திரையரங்கு, சுற்றுலா, வழிபாட்டுதலம் மார்ச் 31 வரை மூட -கேரள அரசு முடிவு!

Share it if you like it

கொரோனா வைரஸ் சீன நாட்டில் கோர தாண்டவம் ஆடியதன் விளைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அந்த நோய் தொற்று கிருமி இன்று பல நாடுகளில் பரவி பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை, 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 5 பேர் உட்பட 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா நோய் மேலும் பரவாமல் இருக்க கேரளாவில் திரையரங்குகள், சுற்றுலாதமான தேக்கடி, மற்றும் வழிபாட்டு தலங்கள்  மார்ச் 31ம் தேதி வரை மக்கள் இவ்விடங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 


Share it if you like it