சீமான் மீது நடிகை விஜயலட்சுமி – கற்பழிப்பு புகார்!

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி – கற்பழிப்பு புகார்!

Share it if you like it

பிரபல நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கினணப்பாளர் சீமான் மீது காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் உள்ளிட்ட சில படங்கள் நடிக்கும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறியுள்ளார். சீமான் என்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் வசதியான இடமாக பார்த்து திருமணம் செய்துகொண்டார். இதனால் எனது ஆதங்கத்தை சீமானுக்கு எதிராக வெளிப்படுத்தினேன்.

அவரின் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் என்னை தொடர்ந்து மேடை தோறும் விபச்சாரி என்கிற முறையில் பேசி வருகின்றனர். இதனால் என் மொத்த குடும்பமும் கடுமையான மனஉளைச்சல் அடைந்துள்ளது, என்று காவல்துறையில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அடுத்து ’ஏய் பொண்டாட்டி…நான் கெட்டவன் இல்லடி..கேடு கெட்டவன்டி’ என்று சீமான் கூறிய வார்த்தையை சமூக வலைத்தளங்களில் கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it