கொரோனா விழிப்புணர்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறு பங்கு !

கொரோனா விழிப்புணர்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறு பங்கு !

Share it if you like it

சென்னை பூங்கா நகரை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சிலர் தினமும் உயர் நீதிமன்றத்திற்கு அருகே பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிக்கு சென்று சுமார் 60 பேருக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால் நேற்று அந்த பகுதிக்கு சென்று உணவளித்து, அதனுடன் 100 பேருக்கு இலவசமாக முக கவசத்தையும் கொடுத்து நாளை வீட்டிலேயே இருங்கள், யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் வலியுறுத்தியுளனர்.

கொரோனா வைரஸ் கண்டு மக்கள் பீதியில் இருக்கும் நிலையில் தற்போது அத்தியாவசிய பொருளான முக கவசம் மற்றும் கை கழுவும் திரவ பொருட்கள் ஆகியவற்றை விற்பனையாளர்கள் தமக்கு சாதகமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்து வரும் இந்த சமூகத்தில் உணவையும், முக கவசத்தையும் இலவசமாக வழங்கிய அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை பலரும் சமூக வலைத்தளங்களிலும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இதேபோல் தமிழகத்தில் தொழில்நுட்பம் இல்லாத பல இடங்களில் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பலர் கொரோனா பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it