கொரோனா விவகாரம் – அமைதியாக தன் கடமையை செய்த மத்திய மந்திரிகள்- வெட்டி பந்தா செய்த கேரளா கம்யூனிஸ்ட் !

கொரோனா விவகாரம் – அமைதியாக தன் கடமையை செய்த மத்திய மந்திரிகள்- வெட்டி பந்தா செய்த கேரளா கம்யூனிஸ்ட் !

Share it if you like it

கொரோனவால் பல நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருக்கும் நமது இந்திய குடிமக்களை மத்திய அரசின் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் திரு.ஜெய் ஷங்கர் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி ஆகிய இருவரும் அரும்பாடுபட்டு வெளிநாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். ஆனால் இந்த செயலுக்காக அவர்கள் தங்களை தானே விளம்பரம் படுத்திக்கொள்ளாமல்,தன் கட்சியையும் விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் தன் பணியை செவ்வனே செய்து வந்தனர்.

இந்நிலையில் மக்களால் வெறுத்து தூக்கி எறியப்பட்ட கம்யூனிஸ்ட் சித்தாங்கத்தை கொண்ட கேரளா அரசானது கொரோனா விவகாரத்தை சாதகமாக்கி, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுவதில் கேரளாவும், உலக அளவில் கியூபாவும், சீனாவும் தான் சிறந்து விளங்குகிறது என தாங்களே விளம்பரம் படுத்தி வருகிறார்கள்.
தன் கடமையை செய்வதை கூட அதையும் ஒழுங்காக செய்யாத போதும் விளம்பரம் படுத்திக்கொள்ளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.


Share it if you like it