சட்டவிரோத கிருஸ்துவ ஆலயம் – பொதுமக்கள் அவதி !

சட்டவிரோத கிருஸ்துவ ஆலயம் – பொதுமக்கள் அவதி !

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சட்ட விரோதமாக கிறிஸ்துவ ஆலயம் [church] ஒன்று கட்டப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இயங்கும் இந்த கிறிஸ்துவ ஆலயத்தை அகற்ற வேண்டும் என்று அந்த ஊர் பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக போராடி வந்துள்ளனர். இந்த ஆலயம் தொடர்பான வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த ஆலயத்தில் திருவிழா நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதனை எதிர்த்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சர்ச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கு திருவிழா நடக்க தடைவிதித்தது.


Share it if you like it