சமூக சேவைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு –  முகம்மது ஷெரீப்(80)

சமூக சேவைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு – முகம்மது ஷெரீப்(80)

Share it if you like it

மத்திய அரசு சாதனை படைத்தவர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்  அனைவரின் கவனத்தை ஈர்த்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் அம்மாநில மக்களால் ஷெரீப் சாச்சா’ என்று அழைக்கப்படும்.

முகம்மது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியிருப்பது அவரின் சமூக சேவைக்கு கிடைத்த கெளரவமாக பார்க்கப்படுகிறது. அவர்  இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்துவர் என ஜாதி, மதம், பேதமின்றி கடந்த 27 வருடங்களாக அடையாளம்.. தெரியாமலும், ஆதரவில்லாமலும் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகளை தனது சொந்த செலவில் செய்துள்ளார். அயோத்திவாசியான இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சுமார் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு  செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it