சவூதி இளவரசருக்கு கொரோனா நோய் தொற்று !

சவூதி இளவரசருக்கு கொரோனா நோய் தொற்று !

Share it if you like it

கொரோனா வைரஸால் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று, சவூதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில், 2900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சவூதி தலைநகர் ரியாத்தின் ஆளுநரும்,சவூதி மன்னர் சல்மானின் மருமகனுமான பைசல் பின் பந்தர் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share it if you like it