சிறந்த சிவ பக்தர் எனது தாத்தா ஈ.வெ.ரா-வை எப்படி? தனது குரு என்று கூறியிருப்பார் வீரமணியை வறுத்தெடுத்த வ.உ.சி பேத்தி..!

சிறந்த சிவ பக்தர் எனது தாத்தா ஈ.வெ.ரா-வை எப்படி? தனது குரு என்று கூறியிருப்பார் வீரமணியை வறுத்தெடுத்த வ.உ.சி பேத்தி..!

Share it if you like it

வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், கடல் வர்த்தகத்தில் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தை உடைத்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடியவர். சிறந்த சிவ பக்தர், சுதேசிய இயக்கத்தை தமிழில் நாட்டில் மிக தீவிரமாக ஆதரித்தவர் நமது வ.உ.சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பாரத தேசத்திற்காக வ.உ.சி. அனுபவித்த கொடுமைகள், கஷ்டங்கள், துயரங்கள், ஏராளம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சிறைச் சாலையில், சாதாரண தண்டனை கைதி போன்று அல்லாமல், மிக கொடூர தண்டனைகளை அனுபவித்தவர் நமது வ.உ.சி.

  • வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற கூடாது.
  • தமிழ் காட்டுமிராண்டி மொழி.
  • திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்.
  • இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது.

என்று பாரத தேசத்திற்கு எதிராக தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துகளை பேசிய ஈ.வெ.ரா-வை தனது குரு என்று வ.உ.சி எப்படி கூறி இருக்க முடியும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.

இந்நிலையில் வ.உ.சி-யின் பேத்தி வீரமணிக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it