சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இளைஞர் கைது !

சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இளைஞர் கைது !

Share it if you like it

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது போதை ஊசி போட்டுக் கொண்ட ஒருவர் தள்ளாடி தள்ளாடி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த இளைஞர் கையில் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில், கட்டுக்கட்டாக போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை அம்பத்தூர் நேரு நகரில் உள்ள மலையாளத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது. அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனை அடுத்து மனோஜை கைது செய்த காவல்துறையினர் 6,890 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *