சீக்கியர் வழிபாட்டு தளத்தில் தர்ணா செய்த..! இஸ்லாமிய மதகுரு சோஹைல் பட்…!

சீக்கியர் வழிபாட்டு தளத்தில் தர்ணா செய்த..! இஸ்லாமிய மதகுரு சோஹைல் பட்…!

Share it if you like it

பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களின் நிலையோ நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வரும் காணொலிகள் இணைய தளங்களில் அவ்வபொழுது வெளி வந்த வண்ணம் உள்ளது.

எந்தவிதமான மத சுதந்திரமும் இல்லாமல் ஹிந்துக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.   வலுக்கட்டாயமாக அவர்களை மதமாற்றம் செய்வது, எதிர்க்கும் நபர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் படுகொலை செய்வது என்று தொடர் கதையாக பாகிஸ்தானில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

லாகூரில்  புகழ் பெற்று விளங்கும் சீக்கிய குருத்வாராவை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளார் இஸ்லாமிய மதகுரு சோஹைல் பட். சீக்கியர்கள் இங்கே தொல்லை கொடுக்கிறார்கள். பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்று அவர் பேசி இருப்பதன் மூலம் அங்கு வசிக்கும் ஹிந்துக்களின் தற்பொழுதைய நிலை என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் நீண்ட மெளனம் காத்து வருகின்றனர் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகள் என்பது கசப்பான உண்மை..


Share it if you like it