கலை குடும்பத்திற்கு ஷாக்..! திரையரங்கு உரிமையாளர் சங்கம் அதிரடி..!

கலை குடும்பத்திற்கு ஷாக்..! திரையரங்கு உரிமையாளர் சங்கம் அதிரடி..!

Share it if you like it

திரைஅரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை புறக்கணித்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அண்மையில் இணைய வழியில் வெளியிட்டனர். தங்களின் கருத்திற்கு மதிப்பளிக்காத சிவகுமார் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் எதையும் திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் அதிரடியாக கருத்து தெரிவித்து இருப்பது திரை நட்சத்திரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தவறுகள் நடப்பதால் நான் அங்கு போவதில்லை என்று நடிகர் சிவகுமார் கூறியது ஹிந்துக்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது. அண்மையில் ஆந்திர அரசு சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it