சீனாவிற்கு ஒரு லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்த…! அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு முடிவு…!

சீனாவிற்கு ஒரு லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்த…! அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு முடிவு…!

Share it if you like it

நமது இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு காரணமான சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கரோல் பாக் நகரில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) உறுப்பினர்கள் சீனப் பொருட்களை எரித்தனர்.

“டிசம்பர் 2021 க்குள் ரூ .1 லட்சம் கோடி மதிப்புள்ள சீனப் பொருட்களை அந்நாட்டில் இருந்து  இறக்குமதி செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளோம்” என்று (சிஐஐடி) பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல் வால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it