சோனியா காந்தி அதிரடி நடவடிக்கை அதிர்ச்சியில் உறைந்த ப.சிதம்பரம்…!

சோனியா காந்தி அதிரடி நடவடிக்கை அதிர்ச்சியில் உறைந்த ப.சிதம்பரம்…!

Share it if you like it

காங்கிரஸ் தலைமைக்கு அண்மையில் சில மூத்த தலைவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் எழுதி இருந்தனர். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

கட்சிக்குள் முறையாக தேர்தல் நடத்தி தலைவர்களை தேர்ந்தெடுக்காவிட்டால் இன்னும் 50 வருடத்திற்கு எதிர்க்கட்சி வரிசையில் தான் காங்கிரஸ் உட்கார நேரிடும் என்று குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத், போன்ற மூத்த தலைவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்து அதிரடியாக சோனியா காந்தி நீக்கி இருப்பது ப.சிதம்பரம் உட்பட மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it