ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சஜாத் நவாப் தார் பலி !

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சஜாத் நவாப் தார் பலி !

Share it if you like it

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவை சேர்ந்த பயங்கரவாதி சஜாத் நவாப் தாரை சுட்டு கொன்றனர் நமது சிஆர்பிஎஃப் வீரர்கள்.

முன்னதாக செவ்வாயன்று, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது ஒரு பயங்கரவாதி கையெறி குண்டு வீசியதில் தலைமை கான்ஸ்டபிள் சிவ்லால் நீதம் படுகாயமடைந்தார். காயமடைந்த வீரரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


Share it if you like it