ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்படை பிரிவை உருவாக்கிய- பிபின் ராவத்

ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்படை பிரிவை உருவாக்கிய- பிபின் ராவத்

Share it if you like it

இந்தியாவில் அரைநூற்றாண்டுக்கு மேல் காஷ்மீர் மாநிலம் பல்வேறு போராட்டங்களையும், அசம்பாவித சம்பவங்களையும் கண்டு உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக அம்மாநிலத்தில் 370 பிரிவு நீக்கம்  மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்ததன் மூலம் இன்று அமைதி பூமியாக மாறி வருகிறது என்பது உண்மை.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு  தனி கவனம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை நிறைவேற்றும் விதமாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்  ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனிப்படை பிரிவு உருவாக்கப்படும் என்றும் இப்படை மாநிலத்தின் பாதுகாப்புக்கு தனிகவனம் செலுத்தவும். வெகு விரைவில் விமானப்படை பிரிவு அடுத்த ஆண்டு துவக்கத்தில் செயல்படும் என டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it