டெல்லி ஜே.என்.யு மாணவர்களிடையே விஷ கருத்தை பரப்பிய -ப.சிதம்பரம்!

டெல்லி ஜே.என்.யு மாணவர்களிடையே விஷ கருத்தை பரப்பிய -ப.சிதம்பரம்!

Share it if you like it

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பதற்கு ஏற்ப  நாடு, மற்றும் மக்களின் நலன் சார்ந்து ஏதேனும் திட்டமோ, நடவடிக்கையோ எடுத்தால் முதலில் அலறுவது காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்ததே.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.சி.ஏ மற்றும் என்.ஆர்.சி போன்றவற்றின் மூலம் 130 கோடி இந்தியர்களில் ஒருவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.  இதனை முற்றிலும் மறந்து விட்டு தவறான கருத்துக்களின் மூலம் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ்  முயற்சிப்பது மிகவும் கீழ்தரமான அரசியல்.

நாட்டின் மிக பெரிய பொறுப்புகள் வகித்தவரும்  ஜமீன் பரம்பரையில் அதிக ஜாமீன் வாங்கியவருமான  ப.சிதம்பரம்  ஜே.என்.யுவில் மாணவர்களை வியாழன் அன்று சந்தித்து அவர்களிடம் விஷக்கருத்துகளை தூவி.

இச்சட்டத்தினால் என்ன பயன் என்று கூட அவர்களுக்கு தெரிவிக்காமல் தனது வழக்கமான பித்தலாட்ட பேச்சின் மூலம் அமைதியாக இருக்கும் ஜே.என்.யு வில் மீண்டும் வன்முறையை  நிகழ்த்த முயற்சி மேற்கொண்டு விடுவாரோ என சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.


Share it if you like it