தற்கொலை செய்யும் அளவிற்கு அதிக  வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்த இஸ்லாமிய குடும்பம்  !

தற்கொலை செய்யும் அளவிற்கு அதிக வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்த இஸ்லாமிய குடும்பம் !

Share it if you like it

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த அஸ்மியா பானு என்ற பெண்ணை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே அதிக வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்கள். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்மியாபானு, தன் பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து யாசர் அராபத் அவரது தாய் ராபியாபேகம் அண்ணன் ரியாஷ் அகமது சகோதரி ஜெனிபர் பாத்திமா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில் நீதிபதி கீதா அவர்கள் நேற்று யாசர் அராபத்க்கு ஆயுள் தண்டனையும் அவரது தாய் அண்ணன் சகோதரி ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.மேலும் அஸ்மியாபானு குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 5 லட்ச ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.


Share it if you like it