தவறிற்கு வருத்தமும், அபராத தொகையையும் செலுத்திய- தெலுங்கான அமைச்சர்!

தவறிற்கு வருத்தமும், அபராத தொகையையும் செலுத்திய- தெலுங்கான அமைச்சர்!

Share it if you like it

தெலுங்கானா  ராஷ்ட்ரீய சமிதி  கட்சி நிறுவனரும் அம்மாநில முதல்வருமான  சந்திரசேகர ராவின்  பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போஸ்டர், பத்திரிக்கை விளம்பரம், என்று வாழ்த்துக்களை அவரின் கட்சி தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  அக்கட்சியின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.சீனிவாஸ் யாதவ் ஜதராபாத்தில் நெக்லஸ் சாலையில் மிகப்பெரிய பேனர் ஒன்றினை முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் வைத்திருந்தார். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலர்  பெரு நகர மாநகராட்சியினருக்கு புகாராகவும்,  சமூக வலைத்தளங்களில் வேகமாகவும் பரவியது.

இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறை மீறல் என்று 5,000 ரூபாய் அபராத தொகையை உடனே கட்டுமாறு  ‘இ-சலான்’  அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர்  வருத்தத்தையும் அதற்குரிய தொகையை செலுத்தி இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 


Share it if you like it