திராவிடர்களாக அடையாளப்படுத்தப்பட்டதற்கு பதில் ஹிந்துக்களாக இருந்திருந்தால் தமிழர்களிடையே ஜாதி மறைந்திருக்கும்- டாக்டர் ஷியாம்!

திராவிடர்களாக அடையாளப்படுத்தப்பட்டதற்கு பதில் ஹிந்துக்களாக இருந்திருந்தால் தமிழர்களிடையே ஜாதி மறைந்திருக்கும்- டாக்டர் ஷியாம்!

Share it if you like it

திராவிட ஆட்சியில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவை பெரும் சரிவை கண்டுள்ளன. ஜாதியை ஒழிப்பேன் என்று கூறியே இன்று வரை அதற்கு நீர் ஊற்றி வருகின்றன திராவிட அரசியல். எந்த பகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம் உள்ளனரோ, அதே ஜாதியினரை தான் வேட்பாளராக நியமிக்கின்றனர். இதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும். திராவிடத்தின் நோக்கம் ஆட்சியை தவிர, வேறொன்றும் இல்லை என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் திராவிடர்களாக அடையாளப்படுத்தப்பட்டதற்கு பதிலாக, இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தால், தமிழர்களிடையே சாதி மங்கியிருக்கும், வேற்றுமை நீர்த்து போயிருக்கும், சமத்துவமும் ஒற்றுமையும் ஓங்கியிருக்கும். இனிமேலாவது தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கட்டும்!


Share it if you like it