திருச்செந்தூர் ஆலயத்தில் மதமாற்றும்  கும்பலின்  நரித்தனம்-அதனை முறியடித்த ஹிந்துக்களின் ஒற்றுமை!

திருச்செந்தூர் ஆலயத்தில் மதமாற்றும் கும்பலின் நரித்தனம்-அதனை முறியடித்த ஹிந்துக்களின் ஒற்றுமை!

Share it if you like it

மதம் மாற்றும் கும்பல்களின் அட்டுழியம், நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாட்டு நிதிக்கு ஆசைப்பட்டு தங்களை, அடகு வைத்து விட்டனர் என்று மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில். தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள, சுவர் ஓவியத்தில் ஒருவரின் கழுத்தில், சிலுவையை வரைந்து தங்களின், கீழ்தரமான மத மாற்றும் வேலையை தொடங்கி விட்டனர். இந்த நரி தனமான செயலை அங்கு வேலை பார்க்கும், மாற்று மதத்தை சேர்ந்த அதிகாரிகளின், தூண்டுதலே ஆகும் என பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதனை அடுத்து ஹிந்துக்களிடம் இருந்து தீவிர எதிர்ப்பு வரவே அந்த ஒவியத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it

2 thoughts on “திருச்செந்தூர் ஆலயத்தில் மதமாற்றும் கும்பலின் நரித்தனம்-அதனை முறியடித்த ஹிந்துக்களின் ஒற்றுமை!

  1. ஐயா தமிழ் மக்களுக்கு வணக்கம்..

    மதமாற்ற கும்பலின் அட்டூழியம் என்று போட்டுள்ளீர்கள்….
    தயவு செய்து வரலாறு அறிந்து செயல்படுங்கள்…

    டச்சுக்காரர்கள் திருச்சிற்றலைவாய் என்னும் திருச்செந்தூரில் உள்ள அருள் மிகு முருகப்பெருமானின் திருக்கோவிலில் விக்கிரகங்களை கடல் வழியே அபகரித்து செல்லும் போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு அந்த விக்கிரகங்கள் தான் காரணம் என எண்ணி. அந்த விக்கிரகங்கை கடலில் வீசி விட்டனர். அந்த விக்கிரகங்களை கடலில் இருந்து கண்டெடுத்தது அந்த காலகட்டத்தில் கிருத்துவ மதம் தழுவிய ஆதி நெய்தல் குடி தமிழர்களாகிய இந்த பரதவர் மக்கள் தான்… கிருத்தவத்தை தழுவுவதற்கு முன்பு வரை திருச்செந்தூர் முருகர் கோவில் தேர் வடம் பிடிக்கும் உரிமம் எங்கள் பரதவ முன்னோர்கள் உரிமை…

    எங்கள் பரத குல பாண்டியாபிதியின் ஆணைக்கு இனங்க திருச்செந்தூர் கோவில் உரிமம் கைவிடப்பட்டது…

  2. மைக்கேல் கூறியது முற்றிலும் உண்மை.

Comments are closed.