திருநெல்வேலியில் இருந்து அரிவாலோடு வந்து இருக்கிறேன் உன்னை வெட்டாமல் விட மாட்டேன் காங்., நிர்வாகி சீமானுக்கு பகீர் மிரட்டல்..!

திருநெல்வேலியில் இருந்து அரிவாலோடு வந்து இருக்கிறேன் உன்னை வெட்டாமல் விட மாட்டேன் காங்., நிர்வாகி சீமானுக்கு பகீர் மிரட்டல்..!

Share it if you like it

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெளன போராட்டம் நடைபெற்றது அப்போது பேசிய வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் சீமானை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் பாரம்பரியமிக்க தலைவர்கள் பேச ஆரம்பித்தால் நீ தாங்க மாட்டாய் நீ என் தலைவர் ராகுல் பற்றியும் சோனியா பற்றியுமா பேசுகிறாய். திருநெல்வேலியில் இருந்து வந்து இருக்கிறேன் வடசென்னை வந்து பார் அரிவாலோடு வந்து இருக்கிறேன் உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார் தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் பேச்சு மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it