நாட்டிற்கு தீங்கு ஏற்படும்போது தன்னிடம் இருப்பதை அளித்த பிரபலங்கள், தன்னிடம் இருந்ததையே அளித்த சிறுவன் !

நாட்டிற்கு தீங்கு ஏற்படும்போது தன்னிடம் இருப்பதை அளித்த பிரபலங்கள், தன்னிடம் இருந்ததையே அளித்த சிறுவன் !

Share it if you like it

  • செங்கல்பட்டு நகரில் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவன் திரு.D.M. சுதீஷ் ராம் தான் இதுநாள்வரை சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகை ரூ.5208 தொகையை பாரதி சேவா சங்கம் [ஆர்எஸ்எஸ்] அமைப்பிடம் ஏழைகளுக்கு சேவை செய்யும் வகையில் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்வானது அப்புகுதியில் இருக்கும் மக்களை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோல் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • திரை பிரபலங்கள் எவ்வளவுதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நாட்டிற்கு ஒரு தீங்கு ஏற்படும்போது நிதியை கிள்ளி தருகிறார்கள். ஆனால் இந்த சிறுவர்கள் நாளை கடையில் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடலாம் அல்லது நோட்டு புத்தகங்கள் வாங்கலாம் என்று தான் சேமித்து வைத்திருந்த முழு பணத்தையும் நாட்டிற்காக வழங்கியுள்ளனர். இதனால்தான் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று அன்றே வள்ளுவன் கூறியுள்ளார்.

Share it if you like it