பக்தி பாடகர் வீரமணி மற்றும் ஒரு சிலரை தவிர உங்கள் சோற்றில் உப்பு இல்லையா? இசை கலைஞர்களே!

பக்தி பாடகர் வீரமணி மற்றும் ஒரு சிலரை தவிர உங்கள் சோற்றில் உப்பு இல்லையா? இசை கலைஞர்களே!

Share it if you like it

ராமரை பட்டாபிஷேகத்துடன் கண்டு களித்து, அவரை  பாடல்கள் மூலம் அர்ச்சனை செய்து உலக மக்களுக்கு அதனை பிரசாதமாக வழங்கி சென்றவர் தியாகராஜர் என்று கூறினால் அது மிகையன்று.

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் காணொலி மூலம் நடிகர் கமல் அரைட்டை அடித்து கொண்டு இருந்தபொழுது. திருவையாறு தியாகராஜரை பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்து ஹிந்துக்களின் உணர்வுகளை மீண்டும்  புண்படுத்தியுள்ளார்.

தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி பேர், புகழ், பணம், செல்வாக்கு. என்று பவனி வரும் டி.எம். கிருஷ்ணா மற்றும், பல இசை விற்பன்னர்கள் கூட  நடிகரின் பேச்சுக்கு துளியும் கண்டனம் தெரிவிக்காது. உலகம் முழுவதும், அவரை தெய்வமாக வழிபடும் மக்கள் மத்தியில் கடும், ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜயப்பன் பாடல்களை பாடும் ராஜூ வீரமணி அவர்கள் மட்டுமே தனது உணவில் டாடா உப்பு போட்டு சாப்பிடுபவர் என்று நெட்டிசன்கள் மற்ற இசை கலைஞர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானிகளை, அவதார புருஷர்களை, கடுமையாக விமர்சித்தவர்கள், கதி என்னவாக போகிறது என்று பல தூய மனிதர்கள் சாபம் கொடுத்து வருகின்றனர்


Share it if you like it