பட்டியல் மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி – தேசிய எஸ்சி ஆணையம், தமிழக தலைமை செயலாளருக்கு விசாரணை நடத்த கடிதம் !

பட்டியல் மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி – தேசிய எஸ்சி ஆணையம், தமிழக தலைமை செயலாளருக்கு விசாரணை நடத்த கடிதம் !

Share it if you like it

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்பவர் பட்டியல் மக்களை பற்றி மிக இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசினார். அதில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திமுக போட்ட பிச்சை என்று ஆவேசமாக பேசினார். இதனை கண்டு மனஉளைச்சலுக்கு ஆளான பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாஜகவினர் சிலர் டெல்லியில் உள்ள தேசிய எஸ்சி ஆணையத்தில், இழிவாகப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இந்நிலையில் தேசிய எஸ்சி ஆணையம் இன்றைக்கு தமிழக தலைமை செயலாளருக்கு விசாரணை நடத்த கடிதம் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it