பள்ளியின் சுவற்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் – ஆசிரியர்கள் அதிர்ச்சி !

பள்ளியின் சுவற்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் – ஆசிரியர்கள் அதிர்ச்சி !

Share it if you like it

இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் சில தேச துரோகிகள் நம் நாட்டில் சிலர் உள்ளனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி அருகே முத்ராக்ஷனி என்ற பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பள்ளியின் சுவற்றில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் [வாழ்க] என எழுதிவிட்டு அதன் பக்கத்தில் திப்பு சுல்தான் பள்ளி என்று எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன் போராட்டம் நடத்தினர். உடனே காவல்துறை விரைந்து வந்து இதனை எழுதியவர்கள் யார் என்பதை கண்டறிந்து விரைவில் கைது செய்கிறோம் என்று சொல்லியபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

சில நாட்களுக்கு முன் அதே கர்நாடகாவில் அசாவுதின் ஓவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் CAA எதிர்ப்பு பொது கூட்டத்தில் ஒரு பெண் மேடையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it