பாகிஸ்தான் மாணவர்களுக்கு  உதவ தயார்- இந்தியா!

பாகிஸ்தான் மாணவர்களுக்கு உதவ தயார்- இந்தியா!

Share it if you like it

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சீனாவில் உள்ள நம் மாணவர்களை இந்திய அரசு தனி விமானத்தின் மூலம் தாய்நாடு திரும்ப அழைத்துக்கொண்டது. இந்நிலையில் சீனாவில் இருக்கும் எங்கள் நாட்டு மாணவர்களை நாங்கள் திரும்ப அழைத்துக்கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தானின்  உயர் அதிகாரிகள் கூறியிருப்பது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் பொது மக்கள் தம் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாடு கோரிக்கை விடுத்தால், சீனாவில் இருக்கும் மாணவர்களை மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு அழைத்து வர தயார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

 

 

.

 


Share it if you like it