பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் கொடூரம் !

பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் கொடூரம் !

Share it if you like it

  • சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளியானது காட்டுத்தீபோல் பரவி வருகிறது. அந்த காணொளியில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் சுமார் 20 கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டுக்கு திரும்பும் தருணத்தில், மருத்துவமனையின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டு அவர்கள் அனைவரும் நோய் தொற்றிலிருந்து மீண்டுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கைகளை உயர்த்தி கைவிரல்களால் மகிழ்ச்சி சின்னத்தை காண்பித்தார்கள். அப்பொழுது அவர்களின் முன் இருந்த 6 வயது குழந்தை ஒன்று “மோடி ஜி மாரேங்கே” அதாவது “பாரத பிரதமர் மோடியை கொலை செய்வேன்” என்று அந்த குழந்தை கூக்குரலிடுகிறது. அதை கேட்டு அருகில் இருந்த பெண்மணி வாய்விட்டு சிரிக்கிறார்.
  • சிறு குழந்தைகளுக்கு நாம் என்ன கற்று தருகிறோமோ அதனுடைய பிரதிபலிப்பாக தான் அந்த குழந்தையின் எதிர்காலம் இருக்கும். நீங்கள் நல்ல சொற்களை விதைத்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் ஒரு அப்துல் கலாம் போன்று ஒரு உன்னத மனிதராக உருவெடுக்கும். அதுவே நீங்கள் மேற்கூறியவாறு நஞ்சை விதைத்தால் ஒசாமா பின்லேடன் போன்று ஒரு தீவிரவாதியாக தான் மாறும் என்பதே நிதர்சனமான உண்மை. வன்முறையை கற்றுக்கொடுக்காமல் அன்பு செய்யும் வழிமுறையை கற்றுக்கொடுங்கள். யாவரையும் அழிக்க கற்றுக்கொடுக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுக்கொடுங்கள் என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


Share it if you like it