புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல விடாமல் தாக்கிய திமுக பொறுப்பாளர் !

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல விடாமல் தாக்கிய திமுக பொறுப்பாளர் !

Share it if you like it

  • திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய திமுக பொருளாளர் முனுசாமிக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர் .
  • ஊரடங்கு நேரத்தில் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையும் இல்லை வருமானமும் இல்லாத காரணத்தினால் தன் சொந்த மாநிலத்திற்கு செல்ல தயாராகினர். அதை பார்த்ததும் திமுக பொருளாளர் முனுசாமியும் அவரது சகோதர் லட்சுமிபதியும் அனைவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளகளை தாக்கிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொழிலாளர்களை மீட்டு சிறப்பு ரயில் மூலம் ஒடிசா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share it if you like it