பெங்களுருவில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் ரத்து – பையாஜி ஜோஷி !

பெங்களுருவில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் ரத்து – பையாஜி ஜோஷி !

Share it if you like it

வருடத்திற்கு ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி மார்ச் 15 முதல் 17 வரை இக்கூட்டம் பெங்களுருவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தொற்றுநோய் COVID-19 இன் தீவிரத்தன்மையையும், யூனியன் மற்றும் மாநில அரசுகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளாலும், பெங்களூரில் திட்டமிடப்பட்ட ABPS என்று அழைக்கப்படும் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் அனைத்து சுயசேவகர்களும் நிர்வாகங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் -ன் மூத்த அதிகாரி பையாஜி ஜோஷி கூறியுள்ளார்.


Share it if you like it