இந்திய கலாச்சாரத்தை மோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும்- பிரபல ஜெர்மனி எழுத்தாளர் கடிதம்!

இந்திய கலாச்சாரத்தை மோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும்- பிரபல ஜெர்மனி எழுத்தாளர் கடிதம்!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டுமுறைகளையும் தொடர்ந்து புண்படுத்தும் விதமாக, அவர்களை ஹீத்தன், காஃபிர் என்றும் சிலையை வணங்கும் நபர்கள் என்று மதரஸாக்கள், மற்றும் தேவாலயங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் குழந்தைகளின் எண்ணத்தில் தேவையற்ற குழப்பத்தையும், ஹிந்துக்களின் மீது வன்மம் ஏற்படும் வகையில் அவர்களின் மனதில் முத்திரை குத்தி விடுகின்றனர்.

இந்துக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு இரண்டு மதங்களின் மத வகுப்பிலும் தவறாமல் நடக்கிறது. கிறிஸ்துவம் மற்றும் இந்து தர்மம் இரண்டையும் நான் உள்ளார்ந்து நன்கு அறிந்திருப்பதால், தயவு செய்து ஒரு ஆலோசனையை வழங்க என்னை அனுமதிக்கவும். என்று பிரபல ஜெர்மனி எழுத்தாளர் மரியா விர்த் மோடிக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

‘அன்புள்ள மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி’

நான் ஒரு இந்திய குடிமகள் அல்ல, ஆனால்  இந்தியாவை மிகவும் விரும்புகிறேன்.  அவளின் கலாச்சாரம் என்றும், செழித்து பரவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் இது மனித இனத்திற்கே மிகவும் நன்மை அளிக்கும் என்பது உறுதி. இந்தியாவை தவிர, அனைத்து பண்டைய கலாச்சாரங்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், அல்லது சில நேரங்களில் கம்யூனிசத்தால் கடுமையான அழிவுகளை சந்தித்துள்ளன.

அல்லாஹ் பூமியில் முஸ்லிம்களை மட்டுமே விரும்புகிறான், எனவே அவர்கள் ஜிஹாத் செய்ய வேண்டும், மேலும் அவர்கள் சொர்க்கத்தில் உயர் பதவியைப் பெறுவார்கள் (குர்ஆன் 4.95) என்று கூறுகிறது. திருச்சபை இனிமேல் கொல்லக்கூடாது (அது முன்பு செய்தது), ஆனால் ஹீத்தனை தாழ்ந்தவனாகக் அது கருதுகிறது. இயேசுவைக்  ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்துக்கள் நரகத்திலிருந்து காப்பாற்ற முடியாது என்று திருச்சபை தொடர்ந்து கூறிவருகிறது.

இந்தியா கடைசி பண்டைய கலாச்சாரம், ஆனால் அந்த மூன்று சக்திகளின் கொடுர தாக்குதலுக்கு தொடர்ந்து இந்தியா உள்ளாகிறது.  இந்த பாகுபாட்டை போக்க இது குறித்து ஐ.நா.விடம் மனு செய்ய வேண்டும் என பிரபல ஜெர்மனி எழுத்தாளர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரியில் தொடரும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அட்டுழியம்!

சிறுபான்மை ஹிந்துக்கள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவது உண்மையே- இம்ரான் கான் ஒப்புதல்!

 

 

 

 


Share it if you like it