பெங்களூருவில் செய்தது சரிதான், விநாயகர் ஊர்வலத்தால் இங்கும் கலவரம் வெடிக்கும்.? சுப.வீன் சர்ச்சை வீடியோ..!

பெங்களூருவில் செய்தது சரிதான், விநாயகர் ஊர்வலத்தால் இங்கும் கலவரம் வெடிக்கும்.? சுப.வீன் சர்ச்சை வீடியோ..!

Share it if you like it

ரம்ஜானுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச 50,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய தமிழக அரசு, தூத்துக்குடி பனிமயமாதா சர்ச் திருவிழாவிற்கு நேரில் சென்று அனுமதி வழங்கிய தமிழக அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மாநிலம் முழுவதும் தடை விதித்ததோடு மட்டுமில்லாமல், விநாயகர் சிலைகளை தயாரிக்கும் இடத்திற்கும் சென்று சீல் வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டது. இவ்விஷயம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில்.

வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் தி.க சிந்தனையாளரான சுப.வீரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விநாயகர் ஊர்வலம் பக்தியா.? கலவரமா? என்று யூடியூபில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார் அதில் அவர் குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும், சிறை சென்று திரும்பியவர்களையும் பாஜக தனது கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கி கொண்டிருக்கிறது அதற்கு காரணம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டம் தீட்டி இருப்பதாக கூறியதோடு நில்லாமல், சுதந்திர போரில் தன்னையே அர்ப்பணித்த பாலகங்காதர திலகரை சமூக சீர்திருத்தத்தில் பின்வரிசையில் நிற்பவர் என்றும் , மத வெறியை மக்களுக்கு ஏற்றியவர் என்றும் வசைபாடியுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தனது போலி மதச்சார்பின்மையை காட்ட பெங்களூருவில் நடைபெற்ற மதக்கலவரத்தில் இஸ்லாமியர்கள் தான் பொறுப்புடன் கோவிலையும், ஹிந்துக்களையும் காப்பாற்றினர் என கூறியதோடு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் ஒரு இஸ்லாமியர் இறைந்துவிட்டார் என்பதை மிக உருக்கத்துடன் ஏதோ நேரில் பார்த்தவர்போல் கதை அளந்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த காணொளியால் சுப.வீக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.


Share it if you like it