பொய் கூறிய முகமது சேட் மூக்குடைந்த- அருணன்!

பொய் கூறிய முகமது சேட் மூக்குடைந்த- அருணன்!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அமலில், உள்ள நிலையில். பொதுமக்கள் நன்கு ஒத்துழைப்பு வழங்கி வருவது. சில இயக்கங்கள், அரசியல்வாதி, ஊடகங்கள், பத்திரிக்கைகளுக்கு துளியும் பிடிக்கவில்லை.

அருணன், சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்கள். மத்திய அரசை திட்டியது போல் இருக்க வேண்டும். அதே சமயத்தில், தங்களை பின் தொடரும், அணில்களுக்கு அறிக்கை அளித்தது, போல் இருக்க வேண்டும். பில்டப் பண்ணுவியோ, பீலா விடுவியோ என்கின்ற வசனத்திற்கு ஏற்ப. தீப்பொறி திருமுகங்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அண்மை காலமாக அறிவுஜீவி என்று தன்னை காட்டிகொள்ளும், அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

மதுரையில் ஒரு கறிக்கடைக்கார முஸ்லிம் போலிஸ் தாக்குதலில் மாண்டு போனார், விசாரணை வேண்டும் எனப்படுகிறது. கொரோனாவிற்கு மதசாயம் பூசிய சங்கிகளே, திருப்திதானா? உங்களது வெறி போலிசுக்கும் தொற்றிவிட்டது, போதுமா?

உண்மை என்னவென்றால்; மதுரை கருப்பாயூரணியில் மயங்கி விழுந்து இயற்கையாகவே இறந்த மாமனாரை, போலீசார் அடித்ததால் அவர் இறந்தாக கூறிய மருமகன். பிரேத பரிசோதனைக்கு பின். உண்மையை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு உடலை பெற்று சென்ற, மருமகன் முகமது சேட்!

இரு சமூகங்களிடையே, வன்முறையை தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த அருணனை. உடனே கைது செய்து கொரில்லா சிறையில், அடைக்க வேண்டும் என்று டுவிட்டரில், அவரின் விசிறிகள் கலாட்டா செய்து வருகின்றனர்.

 

 


Share it if you like it