மதுரை மீனாட்சியின் அருளால் விரைவில் நல்லது நடக்கும் – பேராசிரியர் சாலமன் பாப்பையா !

மதுரை மீனாட்சியின் அருளால் விரைவில் நல்லது நடக்கும் – பேராசிரியர் சாலமன் பாப்பையா !

Share it if you like it

  • கொரோனா நோய் தொற்றால் அரசானது ஊரடங்கு அறிவித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் பக்கம் ஆர்வம் காட்டாதவர்கள் கூட தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்தினை பதிவிடுகின்றனர். பிரபல பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா அவர்கள் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே வணக்கம்.சமூக இடைவெளியை கடைபிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டுவிட்டர் எனும் சமூக வலைதளத்தில் உங்களோடு இணைவதில் அளாதியான மகிழ்ச்சி கொள்கிறேன். மதுரை மீனாட்சியின் அருளில் விரைவில் நல்லது நடக்கும். உங்கள் பேராதரவிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பலரும் லைக் செய்து ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/SPappaiah/status/1258966587802914817?s=20


Share it if you like it