மஹாராஷ்டிரா சாதுக்கள் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது !

மஹாராஷ்டிரா சாதுக்கள் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது !

Share it if you like it

கடந்த மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரண்டு சாதுக்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் கொடூரமாக கம்யூனிஸ்ட் கும்பலால் அடித்து கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த நாளில் கம்யூனிஸ்ட் கும்பல் மீது காவல் துறை அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர், மேலும் 9 சிறுவர்கள் உட்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் ஏப்ரல் 30 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக  குற்றப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வரும் பால்கர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share it if you like it