மத்திய அரசின் நடவடிக்கைக்கு ராமதாஸ் முழு ஆதரவு!

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ராமதாஸ் முழு ஆதரவு!

Share it if you like it

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா தனது கோர முகத்தை இங்கு காட்ட முடியவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் இரவு, பகலாக, அரும்பாடுபட்டதே இதற்கு காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாது. இதுவே கடைசி நீட்டிப்பாக அமைய வேண்டுமானால், அனைவரும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மதித்து நடக்க வேண்டும்!

 


Share it if you like it