மாதர் சங்கமா காசுக்கு மார் அடிக்கும் சங்கமா!

மாதர் சங்கமா காசுக்கு மார் அடிக்கும் சங்கமா!

Share it if you like it

பொள்ளாச்சி சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அழுகை, கதறல், சோகம், செய்திகளை படித்தவர்கள், டிவியில் பார்த்தவர்கள் ரத்த கண்ணீர் நிச்சயம் வடித்து இருப்பர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதற்கு நிகரான கொடிய சம்பவம் ஒன்று அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்து இருப்பது தமிழ்நாடு முழுவதும் கடும் உஷ்ணத்தை கிளப்பியுள்ளது.

டாக்டர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி, பாலியல் உறவு வைத்ததோடு மட்டுமில்லாமல் வீடியோ எடுத்து அதனை நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளான் சுஜி (26) நாகர்கோவில் அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் ஆவான்.

பல பெண்களைச் சீரழித்த நாகர்கோவில் சுஜிக்கு ஆளுங்கட்சியினருடன் தொடர்பு? - சிபிசிஐடி விசாரணைக்கு கோரிக்கை!

இவன் பல ஆண்டுகளாக முகநூல், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக உள்ளூர் முதல் வட இந்தியா வரை தனது கைவரிசையை காட்டியுள்ளான். முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவு, இவனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல், ஜாதி, மதம், கட்சி, இதன் பின்னணியில் யார் உள்ளார்கள். என்று பார்த்த பிறகே மாதர் சங்கம் அகல வாய் திறக்கும், என்று நெட்டிசன்கள் கடும், கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பி.கு) கோட்டாறு காவல்துறை காசி மீது 503, 354, 354 சி, 354 டீ, 385, 420, 66, 66 ஏ, 66 ஈ, 67 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவனை கைது செய்துள்ளனர்.

 


Share it if you like it